இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுக நகர நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பகுதியில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து இன்று (2024 ஜூலை 06,) நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயார் செய்யப்பட்ட சுமார் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.