இலங்கை கடற்படையினர் புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்துடன் இணைந்து 2024 செப்டெம்பர் 19 ஆம் திகதி புத்தளம் ஆலங்குடா பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எண்ணூற்று பத்து (810) கிலோகிராம் பீடி இலைகளை கைப்பற்றினர்.