06 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மணித்தளையில் கைது

இலங்கை கடற்படையினர், இலங்கை பொலிஸாருடன் இணைந்து இன்று 2024 ஒக்டோபர் 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், சாவகச்சேரி மணித்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் பதினைந்து கிலோ ஐம்பத்தைந்து மில்லிகிராம் (15.055) கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமன நிறுவனத்தின் கடற்படையினர், புலனாய்வு பணிக்குழு மற்றும் கல்முனை வாடி (K Point) கடற்படை இணைப்பு, பூநகரி பொலிஸாருடன் இணைந்து 2024 ஒக்டோபர் 19 ஆம் திகதி மாலை சாவகச்சேரி மணித்தளை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு சந்தேகத்திற்கிடமான இருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையொன்றில் (01) ஏழு (07) பொதிகளாக அடைக்கப்பட்ட பதினைந்து கிலோ ஐம்பத்தைந்து மில்லிகிராம் (15.055) கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது. மேலும், குறித்த கேரள கஞ்சாவை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

.இந்த நடவடிக்கை மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி ஆறு (06) மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 முதல் 23 வயதுக்குட்பட்ட சாவகச்சேரி பூநகரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த இரண்டு (02) சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு (01) ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பூநகரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.