சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 515 பாதணிகள் என்பன நொரோச்சோலையில் கடற்படையினரால் கைது
கடற்படையினரால் நொரோச்சோலை ஆலங்குடா கடற்பகுதியில் 2025 பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி, மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட முட்பட்ட சுமார் 496 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் சுமார் 515 ஜோடி காலணிகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படி, 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தின் கடற்படையினரால், நொரோச்சோலை ஆலங்குடா கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று பரிசோதிக்கப்பட்டது. அங்கு குறித்த டிங்கி படகில், கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற பதினாறு (16) பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் நானூற்று ஆறு (496) கிலோகிராம் உலர் இஞ்சியும், ஆறு பார்சல்களில் (06) பொதி செய்யப்பட்ட சுமார் ஐந்நூற்று பதினைந்து (515) ஜோடி காலணிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) மற்றும் குறித்த டிங்கி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 46 வயதுடைய கல்பிட்டியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுடதுடன், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், உலர் இஞ்சி, பாதணிகள் மற்றும் டிங்கி படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.