கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், தென் கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு அனுப்ப கடற்படையின் உதவி
இலங்கைக்கு தெற்கே தேவந்திரமுனையில் இருந்து 326 கடல் மைல் (சுமார் 603 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் இலங்கையில் பல நாள் மீன்பிடி படகொன்றில் விபத்துக்குள்ளானதால் சுகவீனமுற்றிருந்த மீனவர் ஒருவர் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் வெளிநாட்டுக் கப்பலின் உதவியுடன் 2025 மார்ச் 25 கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையின் போது மீன் கடித்த்தால் காயமடைந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படை தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்ட அறிவித்தலுக்கு கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் உடனடியாக பதிலளித்து தென் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த MT Gemini Pearl என்ற கப்பலிற்கு ஆபத்தான நிலையில் உள்ள மீனவரை கரைக்கு கொண்டு வர உதவுமாறு அறிவிக்கப்பட்து.
இதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை MT Gemini Pearl கப்பலில் ஏற்றி பின்னர், அடிப்படை முதலுதவி அளித்து, 2025 மார்ச் 25ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் கொண்டு வந்த்தன் பிறகு கடற்படை கப்பல் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.