49 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சா தலைமன்னாரில் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர், தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா நூற்று இருபத்து நான்கு (124) முந்நூற்று தொண்ணூற்று இரண்டு (392) கிராம் (ஈரமான எடையுடன்) தொகையானது 2025 மார்ச் 28 ஆம் திகதி காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
அதன்படி,தலைமன்னார், மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடையிலான கடல் பகுதியில், வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கப்பல் ரோந்து குழுவை நிலைநிறுத்தி சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 46 சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் நூற்று இருபத்து நான்கு (124) கிலோகிராம் மற்றும் முந்நூற்று தொண்ணூற்று இரண்டு (392) கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் தேடுதல் நடவடிக்கையினால் கரைக்கு கொண்டு வர முடியாததால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படகின்றதுடன், இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.