சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 497 கிலோ பீடி இலைகளுடன் 04 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர் 2025 மே 10 ஆம் திகதி கல்பிட்டி முகத்துவாரம் கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட நானூற்று தொண்ணூற்று ஏழு (497) கிலோகிராம் பீடி இலைகளுடன் (02) டிங்கிகள் மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களை கைப்பற்றினர்.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, 2025 மே 10 ஆம் திகதி கல்பிட்டி, முகத்துவாரம் கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட கடற்படை சிறப்பு கப்பல் படை மற்றும் மரைன் படை ஆகியவற்றால் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, மேலும் அந்தக் கடல் பகுதியில் இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கவனிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன, அங்கு நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பதினான்கு (14) பைகளில் பொதிச்செய்யப்பட்ட நானூற்று தொண்ணூற்று ஏழு (497) கிலோகிராம் பீடி இலைகளுடன், நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) டிங்கிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 41 வயதுடைய கல்பிட்டி, ஆனவாசலை மற்றும் மான்பூரி பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், பீடி இலைகள் மற்றும் டிங்கி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.