உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 76 பேர் கடற்படையினரால்கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடந்த இரு வாரங்களில் (2025 மே 26 முதல் ஜூன் 07 வரை) உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இருபது (20) டிங்கி படகுகளையும் எழுபத்தாறு (76) நபர்களையும் கைப்பற்றியது.

அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் யாழ்ப்பாணத்தின் கடைக்காடு மற்றும் புதுமாத்தளன், திருகோணமலையின் கல்லடிச்சேனை,அடுக்குபாடு, கோட்பே,பொடுவகட்டு, குச்சவெளி மற்றும் சல்பே ஆறு மற்றும் மட்டக்களப்பின் பாலமின்மடு ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், மின் விளக்குகளை பயன்படுத்தி இரவில் சட்டவிரோதரமாக சுழியோடி கடலட்டைகளை பிடித்த 76 சந்தேக நபர்களுடன் 20 டிங்கிகள் மற்றும் 17 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் யாழ்ப்பாணம், திருகோணமலை, ஈச்சிலம்பத்து, முல்லைத்தீவு, குச்சவெளி, கோட்பே மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

<