கடற்படையினரால் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளினால் மூன்று சந்தேக நபர்கள் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2025 மே 26 முதல் ஜூன் 12 வரை மேற்கொண்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருள் 7.48 கிராம், ஐஸ் போதைப்பொருள் 29.86 கிராம் மற்றும் 3.651 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, அம்பாறையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, அனுராதபுரத்தில் ரம்பேவ மற்றும் தபுத்தேகம மற்றும் மன்னாரில் ஊருமலை ஆகிய பகுதிகளில், தென்கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையினால், அம்பாறை, அனுராதபுரம், மன்னார் மற்றும் தபுத்தேகம பொலிஸ் நிலையங்கள் மற்றும் கெபிதிகொல்லேவ, அக்கரைப்பற்று பொலிஸ் சிறப்புப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர், அனுராதபுரம், தலைமன்னார், தபுத்தேகம மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.