தலைமன்னார் மணல் திட்டுக்கு அருகில் உள்ளூர் கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய இந்திய மீன்பிடி படகிலிருந்து மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்
நிலவும் பாதகமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பான சூழ்நிலையில், 2025 ஜூன் 25 ஆம் திகதி தலைமன்னாருக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் பகுதியில் உள்ள ஏழாவது மணல் திட்டுக்கு அருகே இந்திய கடற்பரப்பிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் மிதந்து வந்து கடலில் கவிழ்ந்த இந்திய படகு ஒன்றில் இருந்த நான்கு (04) மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
அதன்படி, தலைமன்னார் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளுக்கு அருகில் இந்திய மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வட மத்திய கடற்படை கட்டளை, இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னாவுடன் இணைக்கப்பட்ட சிறப்பு கடற்படை கப்பல் படையை உடனடி சிறப்பு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக அனுப்பி, கவிழ்ந்து ஆபத்தில் இருந்த ஒரு இந்திய மீன்பிடி படகைக் கண்காணித்து ஆய்வு செய்ததுடன். சீரரற்ற வானிலை மற்றும் கடல் பகுதியில் நிலவும் கொந்தளிப்பான கடல் நிலைமை காரணமாக கவிழ்ந்த இந்திய மீன்பிடி படகில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட நான்கு (04) இந்திய மீனவர்களும் இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர், மேலும் கடற்படையினர் அவர்களை கரைக்கு கொண்டு வந்து மேலதிக உதவிகளை வழங்கினர்.
மேலும், ஆரோக்கியமாக இருக்கும் நான்கு (04) இந்திய மீனவர்களை மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அனர்த்த்திற்கு உட்படும் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான நிவாரணங்களை வழங்க கடற்படை தொடர்ந்தும் தயார்நிலையில் உள்ளது.