சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 979 கிலோகிராம் உலர் இஞ்சியுடன் மூன்று சந்தேகநபர்கள் கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் 2025 ஜூலை 01 அன்று, கல்பிட்டி எத்தாலை களப்பு பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற தொள்ளாயிரத்து எழுபத்தொன்பது (979) கிலோகிராம் உலர் இஞ்சியை ஏற்றி வந்த(03) மூன்று டிங்கிகளுடன் சந்தேகநபர்கள் (03) மூவரும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.

கடல் வழிகள் ஊடாக கடத்தல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்க்கரைகளை உள்ளடக்கி கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஐய நிறுவனத்தினால் கல்பிட்டி எத்தாலை களப்பு பிரதேசத்தில் 2025 ஜூலை 01 ஆம் திகதி மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான03 டிங்கி படகுகள் சோதனையிடப்பட்டது. அங்கு டிங்கி படகுகளில், சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட் (33) பைகளில் பொதிச்செய்திருந்த தொள்ளாயிரத்து எழுபத்தொன்பது (979) கிலோகிராம் உலர் இஞ்சிகளுடன் மூன்று (03) சந்தேகநபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 41 வயதுக்குட்பட்ட கல்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சந்தேக நபர்கள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் உலர்ந்த இஞ்சியை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.