சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் டெவில்ஸ் பொயிண்ட் கடற்கரையில் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

கிளிநொச்சியின் டெவில்ஸ் பொயிண்ட் கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நான்கு (04) சந்தேக நபர்களும் இரண்டு (02) வாகனங்களும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்குத் தயாராக இருந்த மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் ஒரு தொகுதியுடன் 2025 ஜூலை 11ஆம் திகதி கைப்பற்றப்பட்டன.

சட்டவிரோத கடல்சார் கடத்தல் காரணமாக சட்டபூர்வமான வணிகங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் நீண்டகால பாதகமான தாக்கத்தைத் தடுக்கவும், கடலின் சட்டப்பூர்வ பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2025 ஜூலை 11 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனேகவால் கிளிநொச்சி, லோக்கன்னாவாடிய மற்றும் டெவில்ஸ் பொயிண்ட் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, மேற்படி கடலோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) வாடகை வண்டிகள் கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்காக தயாரிக்கப்பட்ட 300 கிலோகிராம் ஏலக்காய், 260 கிலோகிராம் மஞ்சள் தூள், 273 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட மசாலாப் பொருட்களுடன் இரண்டு (02) வாடகை வண்டிகள் மற்றும் நான்கு (04) சந்தேக நபர்களையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 முதல் 49 வயதுக்குட்பட்ட எரக்கண்டி, கல்முனைகுடி, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு (04) சந்தேக நபர்களும், மசாலாப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் மற்றும் இரண்டு (02) வாடகை வண்டிகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.