உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந் தீவிற்கு அன்மித்த உள்நாட்டு நீர்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சந்தேகத்திற்கிடமான (01) இந்திய மீன்பிடிக் படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, 2025 ஆகஸ்ட் 03 அன்று, வடக்கு கடற்படை கட்டளையினால் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த பல இந்திய மீன்பிடி படகுகளை அவதானித்ததுடன், மேலும் அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடல் எல்லையிலிருந்து அகற்ற வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடலோர படகுகளால் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு, இலங்கை கடற்படையினர் உள்ளூர் கடல் எல்லையில் (01) ஒரு இந்திய மீன்பிடி படகில் சட்டப்பூர்வமாக ஏறி ஆய்வு செய்து, எல்லைச் சட்டங்களை மீறி இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக பயணித்த அந்த இந்திய மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் அதில் இருந்த நான்கு (04) இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.