சட்டவிரோத மீன்பிடி முறைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 29 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படை, கடந்த பதினைந்து நாட்களில் (2025 ஆகஸ்ட் 19 முதல் 31 வரை), உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி ஒன்பது (29) சந்தேக நபர்களையும், எட்டு (08) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பாதகமான தாக்கத்தைத் தடுக்கவும், சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் இலங்கை கடற்படை உள்ளூர் நீர்நிலைகளை உள்ளடக்கிய வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவு, திருகோணமலை வலைத்தோட்டம், தேங்காய் முனை, பாலமுனை, ஜின்னபுரம், ஃபாவுல் முனை, ஃபளேக்ஸ்டாஃப் முனை, அடுக்குப்பாடு, டெட்மன்ஸ் கோ மற்றும் கிண்ணியா ஆகிய கடலோர மற்றும் கடல் பகுதிகளிலும், வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவு, யாழ்ப்பாண காவல்துறை சிறப்புப் படையுடன் இணைந்து, யாழ்ப்பாண நகரத்தை உள்ளடக்கிய சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி ஒன்பது (29) சந்தேக நபர்களையும், எட்டு (08) டிங்கி படகுகள் மற்றும் ஒரு (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், வெடிபொருட்கள் மற்றும் மீன்பிடி படகுகள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, வெருகல், கோட்பே, குச்சவெளி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.