சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற பீடி இலைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டார்
இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2025 செப்டம்பர் 24 ஆம் திகதி நீர்கொழும்பு மொரவல கடற்கரையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து (835) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) டிங்கிகளுடன் சந்தேக நபரொருவர் (01) கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் களனி, துன்கல்பிட்டி பொலிஸாருடன் இணைந்து நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, நீர்கொழும்பு கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான மூன்று (03) டிங்கி படகுகளை சோதனையிட்டனர். குறித்த நடவடிக்கையின் போது, சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து (835) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் அறுநூற்று முப்பத்தைந்து (635) கிலோகிராம் பூச்சிக்கொல்லிகளுடன் ஒரு (01) சந்தேக நபர் மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று (03) டிங்கி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு தெற்கு பிடிபன பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர், பீடி இலைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துங்கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.