நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 45 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் யாழ்ப்பாண சிறப்புப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 07 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, உரிமங்கள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்தைந்து (45) சந்தேக நபர்களுடன், பதினொரு (11) டிங்கி படகுகளுடன் கெப் வண்டியொன்றும் (01) இரண்டு (02) பல நாள் மீன்பிடி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.

13 Oct 2025