யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, செல்லுபடியாகும் அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடலட்டைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்களுடன் சுமார் ஆயிரத்து இருநூற்று நாற்பது (1240) கடலட்டைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியையும் கைப்பற்றப்பட்டது.