அனர்த்தத்திற்கு உள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 04 மீனவர்கள் சிதுரல கப்பல் மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்

ஹம்பாந்தோட்டையிலிருந்து சுமார் 354 கடல் மைல் (655 கி.மீ) தொலைவில் ஆழ்கடலில் அனர்த்தத்தில் சிக்கிய கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலைச் சேர்ந்த நான்கு (04) மீனவர்களும், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் கடற்படையினரால் மீட்கப்பட்டு, இன்று (2025 அக்டோபர் 31) காலை இலங்கை கடற்படைக் கப்பலான சிதுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலையும் அதில் இருந்த மீனவர்களையும் கண்டுபிடிக்க உதவி கோருவதாகவும் மீன்வள மற்றும் நீர்வளத் துறை கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு உடனடியாக அறிவித்ததை அடுத்து, மீன்வள மற்றும் நீர்வளத் துறை உடனடியாக பதிலளித்தது. இது தொடர்பாக இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்திற்குத் தெரிவிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பல நாள் மீன்பிடிக் கப்பலான கேஷான் புதா 1, இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் கவிழ்ந்து ஆபத்தில் இருந்தபோது, நான்கு (04) மீனவர்கள் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலால் மீட்கப்பட்டு, MV Graceful Star என்ற வணிகக் கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படையின் சிதுரல என்ற கப்பலும் இந்த மீட்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டது. கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், மீட்கப்பட்ட (04) நான்கு மீனவர்களுக்கும் அடிப்படை முதலுதவி அளித்து, அவர்களை விரைவாக கரைக்கு கொண்டு வந்து, மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு அனுப்ப கடற்படைக்கு முடிந்தது.

மேலும், இலங்கையைச் சேர்ந்த கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயத்திலும், அருகிலுள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு வலயங்களிலும் அனர்த்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்குத் தேவையான நிவாரணம் வழங்குவதற்காக, கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்ட கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை கடற்படை தொடர்ந்து தயாராக உள்ளது.