புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பூச்சிக்கொல்லியை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 நவம்பர் 20 ஆம் திகதி புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய ஒரு டிங்கி (01) படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கடல் வழியாக பொருட்களை கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடல் பாதைகளில் கடற்படை தொடர்ந்து ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு அதிரடி படை தலைமையகத்தினால் 2025 நவம்பர் 20 ஆம் திகதி புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் நடத்திய சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகைக் கவனித்து சோதனை செய்தனர். அந்த நேரத்தில், பதின்மூன்று (13) பைகளில் பொதிசெய்யப்பட்டு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன், டிங்கி படகுகொன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் (01) டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.