திருகோணமலை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணங்களை வழங்குகிறது
தீவை பாதித்துள்ள பாதகமான வானிலை காரணமாக பெய்து வரும் கனமழையினால், திருகோணமலை, முத்தூர் கிண்ணியா மற்றும் அம்பாறை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை இன்று (2025 நவம்பர் 28) காலை முதல் கடற்படையினர் மேற்கொண் வருகின்றனர்.
அதன்படி, திருகோணமலையின் மூதூர், ஷாபி நகர், கிண்ணியா மயலபஞ்சவெளி மற்றும் அம்பாறை கல்முனை கித்தண்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்களால் மேற்கொள்ளப்படுகின்றன.















