நடவடிக்கை செய்தி
மன்னார் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை
மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் 2025 நவம்பர் 29 முதல் டிசம்பர் 01 வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
02 Dec 2025
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் தொடர்ச்சியான ஆதரவு
சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மருத்துவ சேவைகள், உலர் உணவு, குடிநீர் வழங்குதல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த நீர் விநியோக சேவைகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படை நேற்று (2025 டிசம்பர் 01,) உதவி வழங்கியது.
02 Dec 2025


