நடவடிக்கை செய்தி

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் ரூ.31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்காக தயாராக இருந்த சுமார் நூற்று நாற்பது (140) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒரு கெப் வண்டி (01) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

18 Dec 2025

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 26 பேர் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, 2025 டிசம்பர் 06 முதல் 15 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கி மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட இருபத்தைந்து (25) நபர்களையும் பதின்மூன்று (13) டிங்கி படகுகளையும் கைப்பற்றியதுடன். மேலும், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட முப்பத்தாறு (36) தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு (01) சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

18 Dec 2025