மீன்பிடி படகிலிருந்து 2 மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்

திருகோணமலைப் பகுதியில் நிலவும் சீரரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, திருகோணமலை உள் துறைமுகப் பகுதியில் பாதிக்கப்பட்ட மீன்பிடிக் கப்பலில் இருந்த இரண்டு (02) மீனவர்கள், 2025 டிசம்பர் 15 நடத்தப்பட்ட சிறப்பு மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அதன்படி, திருகோணமலைப் பகுதியில் நிலவும் அதிக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக, உள் துறைமுகக் கடல் பகுதியில் கவிழ்ந்த CANOE வகையைச் சேர்ந்த சிறிய மீன்பிடிக் படகு, (NTBR-A-2170-TCO), இலங்கை கடற்படையின் மஹவெலி பிரிவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு மீட்பு நடவடிக்கையின் போது, விபத்துக்குள்ளான மீன்பிடி படகிலிருந்து உயிருக்கு ஆபத்தில் இருந்த இரண்டு (02) மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மேலும், மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களையும் மீன்பிடிக் கப்பலையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலையில் உள்ள மட்கோவ் ஜெட்டிக்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்தது.