நடவடிக்கை செய்தி

உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகொன்று வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, 2025 ஜனவரி 01 அன்று இரவு யாழ்ப்பாணம் காரைநகர் கோவிலான் பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு (01) இந்திய மீன்பிடி படகுடன் பதினொரு (11) இந்திய மீனவர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

02 Jan 2026

மன்னாரில் 115 வாட்டர் ஜெல் வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் 2025 டிசம்பர் 31 அன்று ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன். வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக, வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து (115) வணிக வெடிபொருட்களுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

02 Jan 2026