சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 13 நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை 2026 ஜனவரி 06 முதல் 11 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் மூலம், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமங்கள் இல்லாமல் சுழியோடுதல் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) டிங்கி படகுகளுடன் பதின்மூன்று (13) நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

அதன்படி, திருகோணமலை குச்சவெளி, மன்னார் நரிவிலகுளம், புத்தளம் காயக்குளி மற்றும் காலி ரத்கம ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், வணிக வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் புல்மோட்டை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, மன்னார் மற்றும் நானாட்டான் மீன்வள ஆய்வு அலுவலகங்கள் மற்றும் காலி கடலோர காவல்படையிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.