உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 01 இந்திய மீன்பிடி படகு வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படை, கடலோர காவல்படையுடன் இணைந்து, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இரவு ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இதன் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பத்து (10) இந்திய மீனவர்களையும், ஒரு (01) இந்திய மீன்பிடிக் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, , 2025 ஜனவரி 12 அன்று இரவு, வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவு, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகில் உள்ள உள்ளூர் கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்தது, மேலும் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையிலிருந்து அகற்ற வடக்கு கடற்படை கட்டளைப் பிரிவுடன் இணைக்கப்பட்ட கப்பல்களாலும் கடலோர காவல்படை கப்பல்களாலும் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில், இலங்கை கடற்படை உள்ளூர் கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிப் படகில் சட்டப்பூர்வமாக ஏறி ஆய்வு செய்ததுடன், மேலும் எல்லைச் சட்டங்களை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த (01) இந்திய மீன்பிடி படகுடன் பத்து (10) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மைலடி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டில், கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது,உள்ளூர் நீரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) இந்திய மீன்பிடி படகுகளும், முந்நூற்று நாற்பத்தாறு (346) இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக உட்படுத்தப்பட்டுள்ளனர். இத்துடன் நாட்டின் கடல் சூழலையும் உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



