கல்பிட்டி கந்தகுளி கடலில் 108,480 மருந்து மாத்திரைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

p class="text-justify"> கல்பிட்டி கந்தகுளி கடல் பகுதியில் 2026 ஜனவரி 12 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கந்தகுளி கடற்படைப் பிரிவினால் கந்தகுளி கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மேற்படி கடல் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு (02) பைகள் பரிசோதிக்கப்பட்டன. சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கும் போது கடற்படையினரின் நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஒரு லட்சத்து எட்டாயிரத்து நானூற்று எண்பது (108,480) மருந்து மாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மருந்து மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், கடந்த 2025 ஆம் ஆண்டில், கடற்படையால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பதினாறு லட்சத்து எண்பத்து மூவாயிரத்து எழுநூற்று இருபத்தி இரண்டு (1,683,722) மருந்து மாத்திரைகளை கடற்படை கைப்பற்றி, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளதுடன், கடல் வழியாக கடத்தல் உள்ளிட்ட இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை தொடர்ந்து பங்களிக்கிறது.