நடவடிக்கை செய்தி

கிளிநொச்சி, இரணைதீவுக்கு வடக்கு கடற்பரப்பில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவின் வடக்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 05 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) நபர்களையும், முன்னூற்று முப்பத்தைந்து (335) கடல் அட்டைகளுடன், இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

07 Feb 2026