சிலாபத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 1400 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படையுடன் இணைந்து, சிலாபம், முத்துபந்திய மற்றும் ஆரச்சிகடட்டுவவில் உள்ள வைரம்கட்டுவ பகுதியில் 2026 பிப்ரவரி 17, அன்று நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, போக்குவரத்துக்கு தயாராகி நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த சுமார் ஆயிரத்து நானூற்று ஏழு (1407) கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) லொரியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான தம்பபன்னியுடன் இணைக்கப்பட்ட உடப்புவ கடற்படைப் பிரிவினால், சிலாபத்தின் முத்துபந்திய கடல் பகுதியில் கடலோர காவல்படைத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக சட்டவிரோதமாக கரைக்கு கொண்டு வர முயற்சித்த பின்னர் முத்துபந்திய கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட சுமார் ஆயிரத்து எழுபத்தொரு (1071) கிலோகிராம் பீடி இலைகளும், ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது போக்குவரத்துக்கு தயாராக இருந்த முந்நூற்று முப்பத்தாறு (336) கிலோகிராம் பீடி இலைகளையும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் ஒரு (01) லொரியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முறையே 44 மற்றும் 46 வயதுடைய சிலாபம், ராஜகதலுவ மற்றும் பன்கதெனியவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், பீடி இலை பொதி மற்றும் லாரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.







