சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளுடன் சம்மாந்துறையில் சந்தேக நபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து 2026 மார்ச் 04 ஆம் திகதி அம்பாறை சம்மாந்துறை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் இருநூறு (200) மருந்து மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒரு (01) கைது செய்யப்பட்டார்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தீகாயு, சம்மாந்துறை காவல்துறை சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, சம்மாந்துறை நகரில் 2026 மார்ச் 04 ஆம் திகதி நடத்திய இந்த சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒருவர் சோதனையிடப்பட்டார். மேலும், சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் இருநூறு (200) மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபரும் போதை மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.