நடவடிக்கை செய்தி

மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படையினர், மன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் பகுதியில் 2026 மார்ச் 11 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்திய மீன்பிடி படகொன்றுடன் (01) இரண்டு (02) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Mar 2026

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட உலர்ந்த முந்திரி கொட்டைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் புத்தளத்தில் கைது செய்யப்பட்டனர்

கல்பிட்டியின் ஆலங்குடா மற்றும் பங்களாவத்த கடலோரப் பகுதிகளில் இலங்கை கடற்படை 2026 மார்ச் 10 ஆம் திகதி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது (1840) கிலோகிராம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த முந்திரி கொட்டைகளுடன், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு (02) லொரிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

13 Mar 2026

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடற்படையின் நடவடிக்கைகளின் போது 654 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெராயின் மற்றும் ஏராளமான ஆயுதங்ளை கடற்படையினர் கைப்பற்றினர்

'முழு நாடும் ஒன்றாக' என்ற தேசிய பணியில் முக்கிய பங்குதாரராக, கடற்படை தனது நோக்கங்களை அடைவதற்காக தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை உள்ளடக்கிய சிறப்பு கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினரால் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் போது, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் படக்கொன்றுடன் (01) ஐந்து (05) சந்தேக நபர்கள் மற்றும், மேற்படி கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் படக்கொன்றுடன் (01) ஐந்து (05) சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

13 Mar 2026