நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 994 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

2026 ஏப்ரல் 29 அன்று புத்தளத்தின் ரத்மல்வத்தை பகுதியில் இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வு பணியகம் இணைந்து நடத்திய ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு கிலோகிராம் (994) உலர்ந்த மஞ்சளுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

30 Apr 2026