நீர்கொழும்பில் 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது

2026 மே 12 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட தொள்ளாயிரத்து நாற்பத்தொரு (941) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்கள் (01) டிங்கி உடன் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனியால் நீர்கொழும்பு களப்புப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, களப்புப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு சந்தேகத்திற்கிடமான டிங்கி பரிசோதிக்கப்பட்டது. அப்போது, முப்பது (30) பைகளில் கட்டப்பட்டிருந்த சுமார் தொள்ளாயிரத்து நாற்பத்தொரு (941) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் அந்த டிங்கி ஆகியவை கடற்படையால் கைப்பற்றப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் வசிக்கும் 26 மற்றும் 42 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்களுடன் டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.