நடவடிக்கை செய்தி

நீர்கொழும்பில் 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது

2026 மே 12 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட தொள்ளாயிரத்து நாற்பத்தொரு (941) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) சந்தேக நபர்கள் (01) டிங்கி உடன் கைது செய்யப்பட்டனர்.

13 May 2026