நடவடிக்கை செய்தி
கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடற்படையின் உதவி
இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பில் உள்ள இலங்கை கடற்படை, கடந்த நாட்களில் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெற்றிகரமான பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
06 Aug 2020
கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்
நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை கடற்படை தேசிய பணிக்குழுவில் பங்களித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு சந்தேக நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
05 Aug 2020
கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி
கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர இன்று (2020 ஆகஸ்ட் 03,) இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
03 Aug 2020
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் பொதிகள் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் ஒரு சந்தேகநபர் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரை பகுதியில் வைத்து 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படை கைப்பற்றியது.
30 Jul 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் திருகோணமலை, கின்னியா, முல்லைதீவு மற்றும் நிலாவேலி கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளினால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் ஆகியவை கடற்படையால் கைது செய்யப்பட்டன.
29 Jul 2020
கடற்படையின் சோதனை நடவடிக்கைகளினால் நான்கு சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது
நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2020 ஜூலை 24 ஆம் திகதி வட மத்திய மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளைகளில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளின் போது, 09 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்ததாக 04 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
25 Jul 2020
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கடற்படையால் கைது
இலங்கை பெருங்கடல் பிராந்தியத்தின் கடல் மற்றும் மீன்வள வளங்களை பாதுகாக்க பல ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வரும் கடற்படை, 2020 ஜூலை 18 முதல் 23 வரை கிழக்கு கடற்படை கட்டளையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 27 நபர்களுடன் சட்டவிரோத மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
24 Jul 2020
தெற்கு கடலில் பாதிக்கப்பட்ட கென்ய கப்பலுக்கு கடற்படையின் உதவி
கென்யக் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு கப்பலை பாதுகாப்பாக தரைக்கு கொண்டுவர கடற்படை உதவியது, இது பல நாட்களாக அனைத்து இயந்திரங்களின் முழுமையான செயலிழப்பு காரணமாக தெற்கு கடலில் துன்பத்தில் இருந்தது.
24 Jul 2020