நடவடிக்கை செய்தி
சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் 2025 மார்ச் 01 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கையின் மூலம் பிடித்த பதினேழு பேர் (17) நபர்களுடன் சுமார் நாலாயிரத்து இருநூற்று ஐம்பத்தைந்து (4255) கடலட்டைகள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
03 Mar 2025
சுமார் 78 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2025 மார்ச் 03) யாழ்ப்பாணம் அனலைத்தீவின் வடக்கு கடலில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், நூற்று தொண்ணூற்றி ஏழு (197) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.
03 Mar 2025
மன்னார் பிரதேசத்தில் சுமார் 12 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், மரிச்சக்கட்டி பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், முப்பத்தொரு (31) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளது.
03 Mar 2025
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக கடற்படையினர் உதவினர்

இலங்கைக்கு கிழக்கே, திருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் பல நாள் மீன்பிடி படகில் இருந்து சுகவீனமடைந்த உள்ளூர் மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அன்று, 2025 மார்ச் 01 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடற்படையினர் அனுப்பி வைத்தனர்.
02 Mar 2025
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது

இலங்கை கடற்படையினர் கிண்ணியா, சின்னவேலி, சள்ளிமுனை, நந்திக்கடல், வங்காலை ஆகிய கரையோர மற்றும் கடல் பிரதேசங்களில் 2025 பெப்ரவரி 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் இரவு நேரத்தில் சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏழு (07) பேர், இரண்டு (02) மீன்பிடி கப்பல்கள், சட்டவிரோத மீன்பிடி வலைகள் அறுபத்தைந்து (65), நான்கு (04) டெட்டனேட்டர்கள், இரண்டு (02) ஜெலக்னைட் குச்சிகள் மற்றும் மூன்று (03) அங்குலங்கள் நீளமான சேவா நூல்கள் நான்கு (04) என்பன கைப்பற்றப்பட்டன.
28 Feb 2025
நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் 2025 பெப்ரவரி 22ஆம் திகதி இரவிலும், 23ஆம் திகதி காலையிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளுடன் முப்பத்திரண்டு (32) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
23 Feb 2025
கடற்படையினரால் இரு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் சிலாவத்துறை, வில்பத்து, திருகோணமலை கொட்பே மற்றும் மோதர கிபுலா கால்வாய், கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, இருபது (20) கிராம் கேரள கஞ்சா, ஆயிரத்து ஐம்பது (1050) மில்லிகிராம் மாவா போதைப்பொருள் மற்றும் இருபத்தி ஆறு (26) கிராம் ஐஸ் போதைப்பொருள் முந்நூற்று நாற்பத்தாறு (376) மில்லிகிராம்களுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் கைது செய்தனர்.
21 Feb 2025
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 பேர் கைது

இலங்கை கடற்படையினர், 2025 பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும், கடற்பரப்புகளிலு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகும் மீன்பிடி பத்திரம் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் ஆகியவை கண்டறியப்பட்டதுடன், கடலட்டைகள் மற்றும் சங்குகளை பிடித்த பதினேழு (17) பேர், பன்னிரண்டு (12) மீன்பிடி படகுகள்,மோட்டார் சைக்கிலொன்று (01) மற்றும் நூற்று ஐம்பத்தாறு (156) சட்டவிரோத மீன்பிடி வலைகள், நூற்று எண்பத்து நான்கு (184) கடலட்டைகள் மற்றும் இருபத்தி இரண்டு (22) சங்குகளை கைது செய்யப்பட்டனர்.
21 Feb 2025
நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், நாட்டின் வடக்கே மன்னார் கடற்பரப்பில் மற்றும் நெடுந்தீவுக்கு 2025 அப்பால் பெப்ரவரி 19 இரவு, மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளுடன் பத்து (10) இந்திய மீனவர்கள் கைது கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
20 Feb 2025
சுமார் 56 மில்லியன் ரூபா பெறுமதியான 140 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா வட கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 பெப்ரவரி 17) அதிகாலை யாழ்ப்பாணம் கல்முனை முனையின் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த 140 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
17 Feb 2025