நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (ஜூன் 25, 2024) அதிகாலை யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதிக்கு அப்பால் கடலில் மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) பத்து (10) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு எதிராக இந்திய மீன்பிடிப் படகை ஆபத்தான மற்றும் கலகத்தனமான முறையில் கையாண்டதன் காரணமாக,கடற்படையின் சிறப்பு படகுகள் படையணியின் மாலுமி ஒருவர் கடுமையாக காயமடைந்து யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

25 Jun 2024

05 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 03 சந்தேகநபர்கள் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்

வத்தளை பகுதியில் இன்று (ஜூன் 24, 2024) இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து நடத்திய விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையில், விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட சுமார் இருநூறு (200) கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள், (02) ஒரு பெண் சந்தேகநபர் (01) மற்றும் முச்சக்கரவண்டி (01) ஒரு தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 Jun 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 46 கிலோ பீடி இலைகள் மன்னாரில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் இன்று (2024 ஜூன் 24,) மன்னார் சவுத்பார் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குல் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நாற்பத்தாறு (46) கிலோகிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

24 Jun 2024

நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் வடகடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி இரவு மற்றும் இன்று (2024 ஜூன் 23,) அதிகாலை யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகள் இருபத்தி இரண்டு (22) இந்திய மீனவர்களுடன் கைது செய்யப்பட்டது.

23 Jun 2024

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 407 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் நானூற்று ஏழு (407) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடை) கைப்பற்றுவதற்காக இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி மாலை கல்பிட்டி வெல்லமுண்டலம பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

23 Jun 2024

20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான உள்ளூர் கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் திஸ்ஸமஹாராமவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்

இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கிரிந்த பொலிஸார் இணைந்து 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி இரவு திஸ்ஸமஹாராம, கிரிந்த போன்ற பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, நூற்று நான்கு கிலோகிராம்களுக்கு அதிகமான (104) உள்ளூர் கஞ்சாவை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் (02) மற்றும் ஒரு கெப் (01) ஆகயன கைது செய்யப்பட்டன.

21 Jun 2024

காலி, வக்வெல்ல பாலத்தில் தேங்கிய கழிவுகளை அகற்ற கடற்படையின் பங்களிப்பு

கிங்தொட்ட பகுதியூடாக கடலுக்கு செல்லும் கிங் ஆற்றின் வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் கடும் மழையுடன் அடித்துச் செல்லப்படும் கழிவுகளால் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு கடற்படையினர் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருவதுடன், 2024 ஜூன் 19 ஆம் திகதி மற்றுமொரு கழிவு அகற்றும் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.

20 Jun 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 Jun 2024

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

புத்தளம் தளுவ பகுதியில் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

16 Jun 2024

இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் இரகசிய அறைகளில் மறைக்கப்பட்டுள்ள 3250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடலோரக் காவல்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர், தெவுந்தர இருந்து தெற்கு திசைக்கு சுமார் 356 கடல் மைல் (சுமார் 700 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹு கப்பல் மூலம் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் காலி துறைமுகத்தில் மேற்படி மீன்பிடி கப்பலை சோதனை செய்த போது குறித்த கப்பலின் கவனமாக தயாரிக்கப்பட்ட பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3250 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் 131 கிலோ 754 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் 2024 ஜூன் 15 ஆம் திகதி காலி துறைமுகத்தில் குறித்த போதைப்பொருளை பார்வையிட்டார்.

16 Jun 2024