நடவடிக்கை செய்தி
கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 மே மாதம் 11 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒன்று கைது செய்யப்பட்டது.
12 May 2023
மன்னார் கடல் பகுதியில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் 10 வர்த்தக வெடிபொருள் குச்சிகளுடன் 07 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் 2023 மே மாதம் 8 ஆம் திகதி மன்னார் வங்காலே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்த ஏழு (07) பேர்; வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் பத்து (10) குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டன.
09 May 2023
யாழ்ப்பாணத்தில் 85 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தென் கரையோரப் பகுதியில் இன்று (மே 08, 2023) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 85 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
08 May 2023
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 20 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினரால் கோக்கிளாய் கடற்பகுதியில் 2023 மே மாதம் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபது (20) பேருடன் 08 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
06 May 2023
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை கடற்படையினர் மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேருடன் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது.
06 May 2023
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 25 பேர் கடற்படையினரால் கைது
திருகோணமலை, கொரல்கோவ் கடல் பகுதியில் 2023 மே 02 ஆம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்தைந்து (25) நபர்களுடன் ஐந்து (05) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
04 May 2023
மின் விளக்குகளை பயன்படுத்தி வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது
யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மின்சார விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் (02), இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
02 May 2023
யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் இருந்து 50 வர்த்தக வெடிபொருள் குச்சிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன
யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
01 May 2023
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 836 கிலோகிராம் பீடி இலைகள் கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் இன்று (2023 மே 01) அதிகாலை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள், ஒரு டிங்கி படகு (01) மற்றும் இரு நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
01 May 2023
ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாவத்துறையில் கைது
இலங்கை கடற்படையினரும் மன்னார் பொலிஸாரும் இணைந்து 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை சிலாவத்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 893 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
28 Apr 2023