நடவடிக்கை செய்தி

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பிலும் கிண்ணியா பாலத்தை சூழவுள்ள பகுதியிலும் மின் விளக்குகள் மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நபர்களை அடையாளம் காண விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை இலங்கை கடற்படையினர் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டனர். குறித்த நடவடிக்கையின் போது இருபத்தி இரண்டு (22) சந்தேகநபர்கள் மற்றும் எட்டு (08) டிங்கி படகுகள், பல சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

28 Apr 2023

வடகடலில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 10 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் குதிரிப்பு, வெத்தலக்கேணி மற்றும் நாகர்கோவில் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர், சுழியோடி உபகரனங்கள், சுமார் 1040 கடல் அட்டைகள் மற்றும் ஐந்து (05) டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

27 Apr 2023

26 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் பலாலி அந்தோனிபுரம் கடற்கரைப் பகுதியில் 2023 ஏப்ரல் 23 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 26 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

24 Apr 2023

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த 23 இலங்கையர்கள் வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற வியட்நாம் நாட்டுக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலொன்று கடந்த 2022 நவம்பர் 07 ஆம் திகதி வியட்நாம் கடற்பரப்பில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மூலம் உடனடியாக காப்பாற்றப்பட்ட பின் வியட்நாமில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களின் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட 151 இலங்கையர்கள் 2022 டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன், தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் இருபத்திமூன்று (23) இலங்கையர்கள் 2023 ஏப்ரல் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தனர்.

21 Apr 2023

உதயபுரம் கடற்கரையில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 25 குச்சிகள் கடற்படையினர் மீட்டுள்ளனர்

யாழ்ப்பாணம், உதயபுரம் கரையோரப் பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 25 குச்சிகள் கைப்பற்றப்பட்டன.

20 Apr 2023

மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகம் இணைந்து 2023 ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு திருகோணமலை, நயாறு மற்றும் அலம்பில் கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள விசேட நடவடிக்கையின் போது மின்சார ஒளியை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட எட்டு பேர் (08) நான்கு 04) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

19 Apr 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மற்றும் இன்று (2023 ஏப்ரல் 17) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் மின்சார விளக்குகளை பயன்படுத்தி மற்றும் இரவு சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பன்னிரண்டு (12) பேருடன் மூன்று டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

17 Apr 2023

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 3593 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் கைது

அரச புலனாய்வு சேவையின் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை சிறிய ராவணன் பகுதியில் இருந்து சுமார் 132 கடல் மைல் (சுமார் 244 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது 3593 மில்லியன் ரூபாய்க்கு மேல் வீதி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) கொண்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகொன்றுடன் ஆறு சந்தேக நபர்கள் இலங்கை கடலோரக் காவல்படையின் கப்பல் சமுத்திரரக்ஷாவால் ஏப்ரல் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேக நபர்கள் இன்று (2023 ஏப்ரல் 17,) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த போதைப்பொருள் பரிசோதனையில் கலந்து கொண்டார்.

17 Apr 2023

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேகநபர்கள் வடக்கு கடலில் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், நெடுந்தீவிற்கு மேற்கு கடற்பரப்பில் 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 62 கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட கேரள கஞ்சாவுடன் இந்திய படகொன்று மற்றும் மூன்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

16 Apr 2023

சுமார் 67.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

தலைமன்னார் மணல்பாறையை அண்டிய கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (02 ஏப்ரல் 2023) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்து வந்த ஐஸ் போதைப்பொருள் (Crystal Methamphetamine) 04 கிலோ (ஈரமான எடை). கைப்பற்றப்பட்டுள்ளது.

02 Apr 2023