நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேர் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, இப்பன்தீவு கடல் பகுதியில் 2023 பெப்ரவரி 04 ஆம் திகதி காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்த 03 பேருடன் 17 வாலம்புரிகள், சுழியோடி உபகரணங்கள், 671 கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

05 Feb 2023

சுமார் 04 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2023 ஜனவரி 28 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 12 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

29 Jan 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு கடல் மற்றும் களப்பு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது

நீர்கொழும்பு கடற்பரப்பில் மற்றும் களப்பு பகுதியில் 2023 ஜனவரி 26ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

27 Jan 2023

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற 38 இலங்கையர்கள் விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்கள் 2023 ஜனவரி 25 ஆம் திகதி மாலை விமானம் மூலம் மீன்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப ரீயூனியன் தீவின் பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

26 Jan 2023

16 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் இன்று (2023 ஜனவரி 25) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 49 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) மூன்று சந்தேகநபர்கள் (03) மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றினர்.

25 Jan 2023

20 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம், அனலதீவில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து இன்று (2023 ஜனவரி 24) காலை யாழ்ப்பாணம் அனலதீவு கரையோரப் பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டுள்ளது.

24 Jan 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் கைப்பற்றப்பட்டது

நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய களப்பு பகுதியில் இன்று (2023 ஜனவரி 24) அதிகாலை இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1105 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

24 Jan 2023

54 கிலோ கிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் 2023 ஜனவரி 22 ஆம் திகதி கல்பிட்டி, நொரோச்சோலை பகுதியில் மற்றும் அனுராதபுரம் புதிய நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 54 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரு (02) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

23 Jan 2023

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 989 கிலோகிராம் உலர் மஞ்சள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் பகுதிக்கு அப்பால் கடற்பரப்பில் 2023 ஜனவரி 19 ஆம் திகதி இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற 989 கிலோகிராம் (ஈரமான எடை) உலர்ந்த மஞ்சளுடன் நாங்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

20 Jan 2023

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதுக்காக பணம் எடுத்த 02 சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 ஜனவரி 04 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு வெளியேற்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறி பணம் பெற்ற மனித கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Jan 2023