நடவடிக்கை செய்தி
சர்வதேச கடற்பரப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து 2022 மே 05 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கு சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கையின் மூலம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஏழு வெளிநாட்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
08 May 2022
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் 04 சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் குருநகரில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 மே 05 ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிக்க தயாரிக்கப்பட்ட 07 வெடிபொருட்களுடன் நான்கு (04) சந்தேக நபர்களை கைது செய்தனர்.
06 May 2022
வத்தளை, எலகந்த பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த கடற்படையினரின் உதவி

வத்தளை, எலகந்த பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மூன்று (03) துணிக்கடைகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த கடற்படையினர் இன்று (2022 மே 06) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
06 May 2022
சுமார் 123 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் 2022 மே 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் சவுக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 492 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் டிங்கி படகு ஒன்றையும் கைது செய்தனர்.
04 May 2022
நயாறு கடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

நாயாறு கடற்பகுதியில் 2022 ஏப்ரல் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, மிதவையின் மூலம் கடற்பரப்பில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 வாட்டர் ஜெல் குச்சிகள் உட்பட பல வெடிபொருட்களை கடற்படையினர் மீட்டனர்.
27 Apr 2022
மீன்பிடிக்க தயார்படுத்தப்பட்ட வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

2022 ஏப்ரல் 23 ஆம் திகதி திருகோணமலை சல்லிமுனை கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் வாட்டர் ஜெல் (Water Gel) வர்த்தக வெடிமருந்துகளை பயன்படுத்தி தயார்படுத்தப்பட்ட 08 வெடிபொருட்களின் பாகங்கள், 07 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 2.5 அங்குல நீளமுள்ள 07 பாதுகாப்பு உருகிகள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 Apr 2022
சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான மற்றுமொரு கேரள கஞ்சா பொதியை மன்னாரில் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 20) காலை மன்னார் மணல் கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 81 கிலோ 220 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.
20 Apr 2022
மன்னாரில் மற்றுமொரு கேரள கஞ்சா பொதி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 18) மன்னார், ஊருமலை கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 50 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
18 Apr 2022
மன்னார் தெற்கு கடற்பரப்பில் 59 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கு கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 197 கிலோ 60 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
17 Apr 2022
6200 மில்லியன் ரூபா பெறுமதியான 325 கிலோகிராம் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து 2022 ஏப்ரல் 12ஆம் திகதி மாலை காலி, தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டுக்குள் கடத்த முயச்சித்த ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 300 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படுகின்ற போதைப்பொருள் 25 கிலோவை கொண்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடி படகொன்றும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு டிங்கி படகும், ஒரு கெப் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டர்.
13 Apr 2022