‘Monsoon Cup - 2022’ கோல்ஃப் போட்டித்தொடரில் கடற்படை வீரர்கள் விருதுகளை வென்றனர்.

இலங்கை விமானப்படையால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'Monsoon Cup - 2022' கோல்ஃப் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி திருகோணமலை சைனா ஹார்பர் கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி விருதுகளை வென்றனர்.

அதன்படி, 'Monsoon Defence Challenge Trophy' பிரிவின் கீழ் விளையாடிய கேப்டன் மங்கள மும்முல்லகே இரண்டாம் இடத்தையும், கொமடோர் பிரதீப் கருணாதிலக்க இந்த கோல்ஃப் போட்டியில் வழங்கப்படும் 'Nearest to the Pin' கோப்பையையும் வென்றார்.

போட்டித்தொடரின் பரிசளிப்பு விழா 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி மார்பல் பீச் விமானப்படை உல்லாச விடுதியில் இடம்பெற்றதுடன், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பதிரன இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.