விளையாட்டு செய்திகள்

08வது கெரம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கடற்படை வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

சர்வதேச கெரம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த (08th Carrom World Championship -2022) போட்டித்தொடர் 2022 அக்டோபர் 03 முதல் 07 வரை மலேசியாவின் லங்காவியில் நடைபெற்றதுடன் இப் போட்டித்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெற்ற கடற்படை வீரர் நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் கடற்படை வீராங்கணி ஜோசப் ரோஷிடா ஆகியோர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

11 Oct 2022

‘Intermediate Boxing Championship – 2022’ இல் கடற்படை பல வெற்றிகளை பெற்றுள்ளது

இலங்கை குத்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்த ‘Intermediate Boxing Championship – 2022 போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 05 முதல் 08 வரை கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக குத்துச்சண்டை அரங்கில் நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை 02 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

11 Oct 2022