கட்டளைகளுக்குக் இடையேயான தடகள போட்டித்தொடர் – 2023 இன் மரதன் ஓட்டப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது

இந்த ஆண்டுக்கான கட்டளைகளுக்குக் இடையேயான தடகள போட்டித்தொடர் – 2023 பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படைக் கட்டளையில் நடைபெற உள்ளதுடன் அதன் மரதன் ஓட்டப் போட்டி 2023 பிப்ரவரி 06 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த மரதன் ஓட்டப் போட்டியின் தூரம் ஆண்களுக்கு 21.0975 கி.மீ ஆகவும், பெண்களுக்கு 15 கி.மீ ஆகவும் உள்ளதுடன் இப்போட்டிக்காக அனைத்து கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 35 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதன்படி, ஆண்கள் பிரிவுக்காக போட்டியிட்ட 26 வீரர்களில், வடமத்திய கடற்படை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் மரதன் சம்பியன்ஷிப்பை வென்றதுடன், வடக்கு கடற்படை கட்டளை அதன் இரண்டாம் இடத்தையும் வென்றது. மரதன் மகளிர் சம்பியன்ஷிப் பயிற்சி கடற்படை கட்டளையும் இரண்டாம் இடத்தை வடக்கு கடற்படை கட்டளையும் வென்றது.

மேலும், கடற்படை தடகள அணியின் தலைவர் கொமடோர் (பொறியாளர்) சந்தன போபாகொட தலைமையில் கட்டளைகளுக்குக் இடையேயான தடகள போட்டித்தொடர் – 2023 இன் மரதன் ஓட்டப் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பரிசளிப்பு நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் அருண தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.