12வது பாதுகாப்பு சேவைகள் போட்டித்தொடரில் வெற்றி பெற்ற கடற்படை வீர வீராங்கனைகள் கடற்படை தளபதியினால் பாராட்டப்பட்டனர்.

12வது பாதுகாப்பு சேவைகள் போட்டித்தொடரில் வெற்றி பெற்ற கடற்படை வீர வீராங்கனைகளை இன்று (2023 ஏப்ரல் 20,) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் வெலிசர கடற்படை வளாகத்தில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர உள்ளக விளையாட்டரங்கில் சந்தித்து பாராட்டினார்.

இதன்படி கைப்பந்து, பளுதூக்குதல், சைக்கிள் ஓட்டுதல், டேபிள் டென்னிஸ், கபடி, வில்வித்தை, வலைப்பந்து, மல்யுத்தம் மற்றும் தனிநபர் போட்டிகளான ஜூடோ, டேக்வாண்டோ, ரோயிங் ஆகிய குழுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் கடற்படைத் தளபதியின் பாராட்டுகளைப் பெற்றனர். இதற்கிடையில், அவர் ஒவ்வொரு அணியுடனும் குழு புகைப்படங்களுக்கு தோன்றினார்.

மேலும், இந் இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் நளீன் நவரத்ன மற்றும் கடற்படை பணிப்பாளர் விளையாட்டு கொமடோர் ரொஷான் அத்துகோரல, விளையாட்டுப் குழுகளின் தலைவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.