பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து பெண்கள் போட்டியில் இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படை வென்றது

பன்னிரண்டாவது (12) பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் - 2022/23, யில் பாதுகாப்பு சேவைகள் கடற்கரை கைப்பந்து போட்டித்தொடர் 2023 ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு பிரவுன்ஸ் கடற்கரையில் நடைபெற்றது, இதில் கடற்படை மகளிர் கடற்கரை கைப்பந்து அணி இரண்டாம் இடத்தை வென்றது.

இலங்கை கடற்படை கைப்பந்துக் குழுவினால் ஏட்பாடு செய்யப்பட்ட இப்போட்டித்தொடரில், இலங்கை கடற்படையின் கடற்கரை கைப்பந்து மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி, கடற்படை விராங்கணி ஏ.கே.டி. லக்ஷானி மற்றும் கடற்படை வீராங்கணி எம்.ஜி.டி. பண்டார ஆகியோர் இறுதிப் போட்டிக்கு போட்டியிட்டனர். அங்கு போட்டிகள் 02-01 என முன்னிலை பெற்ற இராணுவ மகளிர் அணி முதலாம் இடத்தை வென்றதுடன் இரண்டாம் இடத்தை கடற்படை மகளிர் அணி பெற்றது.

இந்நிகழ்வில் கடற்படை ஆயுதப் பணிப்பாளர் கொமடோர் ஹர்ஷ டி சில்வா, கடற்படை கடற்கரை கைப்பந்து பிரிவின் தலைவர் கேப்டன் ரஞ்சித் வல்கம்பாய உட்பட சிரேஷ்ட மற்றும் இளைய முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.