ஜப்பானில் நடைபெற்ற தடகள போட்டி தொடரொன்றில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜப்பானில் நடைபெறுகின்ற 39வது சிஷோகா மற்றும் 10 வது கினாமி மவிதகா நினைவு தடகள போட்டித்தொடர் – 2023 (39th Shizuoka Meet & 10th Kinami Machitaka Memorial Athletics Meet – 2023) இல் 2023 மே 03 அன்று நடைபெற்ற 800m பெண்கள் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை கடற்படையின் கடற்படை விராங்கனை கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதன்படி கடற்படை விராங்கனை கயந்திகா அபேரத்ன 800 மீற்றர் பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் 02 நிமிடம் 04.35 வினாடிகளில் தங்கப் பதக்கத்தை வென்று இலங்கை கடற்படைக்கு பெருமை சேர்த்ததோடு சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பெருமையையும் உயர்த்தினார்.

மேலும், கடற்படை விராங்கனை கயந்திகா அபேரத்ன, 800 மீற்றர், 1500 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தற்போதைய இலங்கை சாதனைகளை வைத்திருக்கும் கடற்படை வண்ணங்களை வென்றுள்ள திறமையான வீராங்கனை ஆவார்.

மேலும், தற்போதைய கடற்படைத் தளபதியும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவருமான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், கடற்படை விளையாட்டுத் துறையின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், நிபுணர் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான சிறப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் கடற்படை விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்துள்ளது.