Barts Bash -2024 படகோட்டம் போட்டித்தொடரில் கடற்படைக்கு பல வெற்றிகள்

‘Barts Bash -2024’ படகோட்டம் போட்டித்தொடர், 2024 செப்டம்பர் 08 ஆம் திகதி போல்கொட நீர்த்தேக்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அங்கு கடற்படை படகோட்டம் அணியின் விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகளைப் பெற்றனர்.

Ceylon Motor Yacht Club மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித்தொடரில் நாடளாவிய ரீதியில் உள்ள பிரபல விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டதுடன், கடற்படையின் சார்பில் கடற்படை படகோட்ட அணியைச் சேர்ந்த 20 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதன்படி, திறந்த பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீரர் பி.டி.டி.எஸ்.ராஜபக்ஷவும், இரண்டாம் இடத்தை கடற்படை வீரர் யு.டி.ராஜபக்ஷவும் பெற்றனர்.

Laser பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீர்ர் பி.டி.டி.எஸ்.ராஜபக்ஷவும், இரண்டாம் இடத்தை கடற்படை வீர்ர் யு.டி.ராஜபக்ஷ மற்றும் மூன்றாம் இடத்தை கடற்படை வீர்ர் ஜே.எஸ்.செனவிரத்னவும் பெற்றனர்.

GP 14 பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீர்ர் கே.சி.டி.எஸ் சொய்சா மற்றும் கடற்படை வீர்ர் பி.டி.எஸ் பெரேராவும் இரண்டாம் இடத்தை கடற்படை வீர்ர் ஜே.எம்.ஜே.பி அத்தநாயக்க மற்றும் கடற்படை வீர்ர் ஏ.எஸ்.கே சொய்சாவும் மூன்றாம் இடத்தை அதிகாரி டி.பி.ஏ.எஸ் வீரதுங்க மற்றும் கடற்படை வீர்ர் ஜி.பி.பி கருணாரத்ன ஆகியோர் பெற்றனர்.

Enterprise பிரிவில் முதலாம் இடத்தை கடற்படை வீர்ர் ஜேஎம்பிஎல் ஜயபத்ம மற்றும் கடற்படை வீர்ர் எஸ்.பி.பி.என் குமார ஆகியோர் பெற்றுள்ளதுடன் கடற்படை வீர்ர் ஜே.பி.எஸ்.டி.இ சில்வா மற்றும் கடற்படை வீர்ர் எல்ஏசிஎம் குணதிலக்க ஆகியோர் இரண்டாம் இடத்தையும், லெப்டினன்ட் பி.எஸ்.எஸ் கோமஸ் மற்றும் கடற்படை வீர்ர் ஏ.ஜி.பி அசங்க ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.