13வது பாதுகாப்பு சேவை Traithlon போட்டித்தொடரின் ஆண்கள் பிரிவில் கடற்படையிற்கு முதலாம் இடம்
13வது பாதுகாப்பு சேவைகள் Traithlon போட்டித்தொடர் - 2025 அனுராதபுரத்தில் உள்ள திசா ஏரிக்கு அருகில் 2025 மார்ச் 06 ஆம் திகதி இடம்பெற்றதுடன், இப் போட்டித்தொடரின் ஆண்கள் பிரிவில் சுழியோடி கடற்படைவீர்ரான ஜே.டி.பி.பி ஜயசிங்க முதலாம் இடத்தைப் பெற்றார்.
இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 49 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய 13வது பாதுகாப்புச் சேவைகள் Traithlon போட்டியிற்கு கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய 10 விளையாட்டு வீர்ர்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 03 வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வானது 750 மீ நீந்துதல், 20 கிமீ சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 5 கிமீ வீதி ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிறது.
இதன்படி, சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்திய சுழியோடி கடற்படைவீர்ரான ஜே.டி.பி.பி.ஜயசிங்கவினால் பாதுகாப்பு சேவையின் Traithlon போட்டித்தொடரின் ஆண்களுக்கான பிரிவில் முதலாம் இடத்தை வெற்றிப்பெற்றார்.