26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் கடற்படை தடகள வீராங்கனை லக்ஷிமா மெண்டிஸ் உட்பட 4x400 அஞ்சலோட்ட அணி சொந்த நாட்டிற்காக வெண்கலப் பதக்கங்களை வென்றது
26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், 2025 மே 27 முதல் 31 வரை, “கொரியாவின் குமி” நகரத்தில் (Gumi, Korea) வெற்றிகரமாக நடைபெற்றன. குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்ட மற்றும் கலப்பு 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை தடகள வீராங்கனை மற்றும் கடற்படை பெண் மாலுமி லக்ஷிமா மெண்டிஸ் உள்ளிட்ட அணிகள், போட்டிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கங்களை வென்றன.
அதன்படி, 43 ஆசிய நாடுகள் பங்கேற்ற 26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில், கடற்படை பெண் மாலுமி லக்ஷிமா மெண்டிஸ் 4x400 மீட்டர் பெண்கள் அஞ்சலோட்ட போட்டியை 03:36.67 நிமிடங்களிலும், 4x400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்ட பந்தயத்தை 03:21.95 நிமிடங்களிலும் முடித்து, இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழைக் கொண்டு வருவதற்கும், சர்வதேச அரங்கில் இலங்கையின் பெருமையை உயர்த்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.